சி.ஏ.ஏ., என்.ஆர்.சி., என்.பி.ஆர். வேண்டாம் சென்னையில் கல்லூரி மாணவர்கள் போராட்டம்!

 

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கம், அயோத்தியில் ராமர் கோவிலைக் கட்டுவது என்பதன் தொடர்ச்சியாக 2019 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட சி.ஏ.ஏ. சட்டமானது நடைமுறைக்கு வருவதாக பாசிச மோடி கும்பல் கடந்தவாரம் அறிவித்தது.

இசுலாமியர்கள் மட்டுமின்றி பெரும்பான்மை மக்களது குடியுரிமையைக் கேள்விக்குள்ளாக்கி நாட்டை இரண்டாகப் பிளந்து இந்துராஷ்டிரத்தை அமைக்கத் துடிக்கும் பாசிச மோடி-ஆர்.எஸ்.எஸ். கும்பலின் சதித்தனத்தை எதிர்த்து சென்னையில் புதுக் கல்லூரி மாணவர்கள் 2 நாட்களாகப் போராட்டம் நடத்தியுள்ளனர்.

“பி.ஜே.பி. ஆர்.எஸ்.எஸ். ஒழிக” “இந்துத்துவ அரசியல் ஒழிக” “சி.ஏ.ஏ. என்.ஆர்.சி.யை ஏற்கமாட்டோம்” “பாசிசம் வீழ்க” என்று முழங்கி பாசிச மோடி அரசுக்கெதிரான தமது எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.

தகவல்

செங்கனல் செய்தியாளர்

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன