செங்கனல் வெளியீடு : “பாசிசத்தை எதிர்க்க வேண்டுமா? தி.மு.க., காங்கிரசிடம் சரணடையுங்கள்” – ஓடுகாலி மருதையனின் திண்ணை உபதேசம்!

 

ஜூன் 2, 2023-இல் செங்கனல் இணையதளத்தில் வெளியான “தி.மு.க. பிரச்சாரகர் மருதையனின் திண்ணை உபதேசங்களும் பாட்டாளி வர்க்கக் கட்சியின் பாசிச எதிர்ப்பும்!” என்ற கட்டுரை, தி.மு.க., காங்கிரசு போன்ற பாசிச எதிர்ப்பில் சமரச-ஊசலாடும் சக்திகளை ஒரு பாட்டாளி வர்க்கக் கட்சி எப்படிப் பார்க்க வேண்டும், கையாள வேண்டும் என்ற கண்ணோட்டத்தைத் தெளிவுபடுத்துவதற்காக எழுதப்பட்டதாகும். அக்கட்டுரையைச் சில திருத்தங்கள், சேர்க்கைகளுடன் வெளியீடாகக் கொண்டு வருகிறோம். 

பாசிச எதிர்ப்பில் சமரச-ஊசலாடும் சக்திகளைத் தம் பக்கம் வென்றெடுப்பதற்கு மாறாக அவைகளின் (தமிழ்நாட்டில், தி.மு.க.வின்) காலில் விழுந்து சரணாகதி அடைவது என்பது கேடுகெட்ட வலது சந்தர்ப்பவாதப் போக்கென்றால், அக்கட்சிகளையே எதிரிகள் போலப் பாவித்து ஒதுக்குவது என்பது இடது சந்தர்ப்பவாதப் போக்காகும். இவ்விவகாரத்தில் மருதையன் கும்பல் முதல் போக்கையும் அரசியலற்ற, சித்தாந்தமற்ற லும்பன் கும்பல் இரண்டாவது போக்கையும் துலக்கமாக வெளிப்படுத்துகின்றன. மார்க்சிய-லெனினியத்தைத் துறந்தோடிய ஓடுகாலிகளின் இவ்விரு போக்குகளுமே இரண்டு கடைக் கோடித்தனங்களின் (extreme) துலக்கமான வெளிப்பாடுகளாகும். ஒரு பாட்டாளி வர்க்கக் கட்சி பாசிச எதிர்ப்புக் காலகட்டத்தில் சமரச-ஊசலாடும் சக்திகளை எங்ஙனம் கையாளக் கூடாது என்பதற்கான தெளிவான எதிர்மறை எடுத்துக்காட்டுகளாகும். இவ்விரு போக்குகளுமே பாசிச எதிர்ப்பில் அபாயகரமானவை. முறியடிக்கப்பட வேண்டியவை.

இச்சிறு வெளியீட்டில், மேற்கண்ட இரு போக்குகளில் வலது சந்தர்ப்பவாதப் போக்கை பிரதானமாக விவாதித்துள்ளோம். இடது சந்தர்ப்பவாதப் போக்கைப் பற்றி சில குறிப்புகளை மட்டும் பின்னிணைப்பாகக் கொடுத்துள்ளோம். 

பாசிச எதிர்ப்பில் உண்மையான அக்கறை கொண்டுள்ள புரட்சிகர, ஜனநாயக சக்திகளுக்கு இவ்வெளியீடு ஒரு தெளிவான பார்வையை வழங்கும் என்று நம்புகிறோம். 

  • செங்கனல்

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன