JNU மாணவர்கள் மீதான தாக்குதலைக் கண்டித்தும், ஆளுநர் ஆர்.என்.ரவியைக் கண்டித்தும் கண்டன ஆர்ப்பாட்டம் – மக்கள் அதிகாரம்

 

டெல்லி JNU பல்கலைக்கழக மாணவர்கள் மீதான தாக்குதல்! காரல் மார்க்ஸ், பெரியார், அம்பேத்கர், பூலே  படங்கள் உடைப்பு – காரல் மார்க்ஸை அவதூறாக விமர்சித்த தமிழக ஆளுநர் ரவியின் திமிர்த்தனத்திற்கு முடிவு கட்டுவோம், என்ற முழுக்கத்தின் கீழ் 27.02.2023 அன்று மாலை 4 மணிக்கு, தர்மபுரி BSNL அலுவலகம் அருகில், மக்கள் அதிகாரம் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தருமபுரி மண்டல  செயலாளர் தோழர். ராஜா அவர்கள் தலைமை தாங்கினார்.

தோழர்.பாண்டியன். விசிக மாவட்ட செய்தி தொடர்பாளர் , தோழர். கோவிந்தராஜ் மாவட்ட செயலாளர் (CPIML) விடுதலை, தோழர்.சந்தோஷ்குமார் மாவட்ட செயலாளர் திவிக, தோழர்.சின்னவன் மாவட்ட அமைப்பாளர் மஜஇக, தோழர். வில்கிருஷ்ணன் மாவட்ட செயலாளர் CPIML, தோழர்.பழனி மஜஇமு, தோழர்.முனுசாமி இனங்களின் இறையாண்மைக்கான சுதந்திர விவசாயிகள் சங்கம், ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள். தோழர்.கோபிநாத் மாநில இணைச் செயலாளர் மக்கள் அதிகாரம் சிறப்புரையாற்றினார். இறுதியாக , தோழர்.ராமலிங்கம் வட்டார செயலாளர், மக்கள் அதிகாரம் தருமபுரி, அவர்கள் நன்றியுரையாற்றினார்.

தகவல்:
தோழர். கோபிநாத்,
மாநில இணைச் செயலாளர்,
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு,
9790138614.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன